நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

தேர்தல் அறிக்கை: மக்களிடம் கருத்து கேட்கிறது பாஜக

புது டெல்லி:

மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்காக பொதுமக்களிடம் இருந்து பாஜக கருத்து கேட்கிறது.

அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா கூறுகையில்,
நாட்டின் வளர்ச்சியை ஒன்றிய அரசு சிறப்பாக முன்னெடுத்து வருகிறது. இந்தியாவை வளர்ந்த நாடாக உருவாக்குவதற்கான அமிர்த காலம் நடைபெற்று வருகிறது.

2024 மக்களவைத் தேர்தலுக்கான வாக்குறுதிகள் குறித்து பாஜக தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதற்காக பொதுமக்களிடம் இருந்தும் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

பொதுமக்கள் அளிக்கும் வாக்குறுதிகள் தொடர்பான யோசனைகள் பரிசீலிக்கப்பட்டு, அவை தேர்தல் அறிக்கையில் இடம் பெறும் என்றார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset