நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

1 எம்டிபி விவகாரத்தில் முன்னாள் சிங்கப்பூர் வங்கியாளர் சாட்சியமளிக்க மறுத்துவிட்டார்: எம்ஏசிசி

கோலாலம்பூர்:

1 எம்டிபி வழக்கில் சிங்கப்பூரில் உள்ள முன்னாள் வங்கியாளர் ஒருவர், சாட்சியமளிக்க மறுத்துவிட்டார்.

நஜீப் ரசாக்கின் 1 எம்டிபி வழக்கின் எம்ஏசிசி விசாரணை அதிகாரி நூர் அய்டா ஆரிஃபின் இதனை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

சிங்கப்பூர் அதிகாரிகளால் பிஎஸ்ஐ வங்கியின் முன்னாள் வங்கியாளர் யாக் இயூ சீ இங்கு நீதிமன்றத்தில் ஆஜராக விரும்பவில்லை எனத் தெரிவித்தார்.

2016ஆம் ஆண்டு யாக் சிங்கப்பூர் குடியரசில் 18 வாரங்கள் சிறை சென்றதாக ஐடா கூறினார்.

2018ஆம் ஆண்டு யாக்கின் அறிக்கையை எம்ஏசிசி பதிவு செய்யப்பட்டது.

ஆனால், அவர் தற்போது எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.

கடந்த ஆண்டு, மற்றொரு முன்னாள் பிஎஸ்ஐ வங்கி ஊழியரான கெவின் ஸ்வாம்பிள்ளை இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக ஆஜரானார் என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset