செய்திகள் மலேசியா
அரசியல் சீர்திருத்தங்களை வலியுறுத்தி பெர்சே பேரணி: நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு
கோலாலம்பூர்:
அரசியல் சீர்திருத்தங்களை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் பெர்சே பேரணியை நடத்தி வருகிறது.
இந்த பெர்சே பேரணியில் சுமார் 100க்கும் அதிகமான எதிர்ப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இங்குள்ள பிளாசா துகு நெகாராவில் காலை 8 மணிக்கு கூடிய கூட்டம் சுமார் 8.30 மணியளவில் நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கி பேரணியாக செல்லத் தொடங்கியது.
எதிர்ப்பாளர்கள் மஞ்சள் நிற பதாதைகளை ஏந்திச் சென்றனர்.
நாங்கள் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறோம், சுத்தமாகவும் நியாயமாகவும், சீர்திருத்தம் மேற்கொள்ளுங்கள், பாங்கிட் ரக்யாட், நியாயமாக நடந்து கொள்ளுங்கள், பதவியில் சொகுசாக இருக்காதீர்கள் என்ற கோஷங்களை அவர்கள் எழுப்பினர்.
இவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் மகஜர் ஒன்றை வழங்க முயற்சித்தனர்.
ஆனால் நாடாளுமன்றத்திற்கு சொல்வதற்கு முன் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர் இவர்களை சந்தித்து மகஜரை பெற்றுக் கொண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 11:26 am
தகாத முறையில் பேசியதற்காக வருந்துகிறேன்: பிரதமர் முன்னிலையில் மன்னிப்பு கோரினார் சனுசி
May 5, 2024, 10:47 am
கெடாவில் கடும் ஏழைகளின் எண்ணிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க 2 மாதம் அவகாசம்: பிரதமர்
May 5, 2024, 10:32 am
பெட்ரோல், டீசல் விலை உயரும் எனும் அந்நிய நாட்டு ஊடகத்தின் செய்தி தவறானது: ஃபஹ்மி
May 4, 2024, 6:19 pm
நாட்டில் அனைத்து சமூகத்தினரின் உரிமைகளும் காக்கப்படும்: பிரதமர் அன்வார்
May 4, 2024, 3:45 pm
நஜீப் விவகாரத்தில் அம்னோ, தேமு ஊமையாக இருக்கக் கூடாது: டத்தோஶ்ரீ தனேந்திரன்
May 4, 2024, 3:43 pm
கோல குபு பாருவில் பிரதமரை விமர்சித்ததாக கூறப்படும் தகவலை டத்தோஶ்ரீ சரவணன் மறுத்தார்
May 4, 2024, 3:41 pm