செய்திகள் மலேசியா
கோலாலம்பூரில் உலக தங்க வணிகர்கள் மாநாடு 101 நாடுகள் பங்கேற்பு: டத்தோ அப்துல் ரசூல்
கோலாலம்பூர்:
உலக தங்க வணிகர்கள் மாநாட்டில் 101 நாடுகள் பங்கேற்கவுள்ளன என்று
மலேசிய இந்தியர் பொற்கொல்லர் சங்கத்தின் தலைவர் டத்தோ ஹாஜி அப்துல் ரசூல் தெரிவித்தார்.
மலேசியாவில் முதல் முறையாக உலக தங்க வணிகர்கள் மாநாடு வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி புக்கிட் பிந்தாங் J.W. Marriott ஹோட்டலில் மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.
தென்கிழக்கு ஆசியாவில் இந்த மாநாடு நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.
இதற்கு முன்னர் உலக தங்க வணிகர்கள் மாநாட்டை அரபு நாடுகள் நடத்தி உள்ளன.
இம்முறை உலக தங்க வணிகர்கள் மாநாட்டை ஏற்று நடத்தும் வாய்ப்பு மலேசியாவுக்கு கிடைத்துள்ளது என்று அவர் சொன்னார்.
உலகின் பல்வேறு பாகங்களிலிருந்து 101 நாடுகளைச் சேர்ந்த தங்க வணிகர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.
தங்கத்தில் முதலீடு செய்தால் அதற்கு உத்தரவாதம் உள்ளது.
தங்க வணிகத்தில் புகழ் பெற்று விளங்கும் வணிகர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதால் மலேசிய தங்க வணிகர்கள் தங்களது வியாபாரத்தை உயர்த்திக் கொள்ள இந்த மாநாடு பெரும் துணை புரியும் என்று அவர் சொன்னார்.
இந்த மாநாட்டில் பங்கேற்க விரும்பும் மலேசிய வணிகர்கள் 012-2031786 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 28, 2024, 3:00 pm
கோல குபு பாருவில் பொய் பிரச்சாரங்களை இந்திய சமூகம் நம்பக் கூடாது: டத்தோ ரமணன்
April 28, 2024, 2:57 pm
டத்தோ ரமணனின் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் 5,000 பேர் கலந்து கொண்டனர்
April 28, 2024, 2:53 pm
இந்திய அரசின் உயர் கல்வி வாய்ப்புகளை இழந்தால் மீண்டும் கிடைக்காது: சுரேந்திரன் கந்தா
April 28, 2024, 1:59 pm
முதியவரைத் தாக்கிய விவகாரம்; சமூக நல இல்லத்தின் நிர்வாகிக்கு 4,500 ரிங்கிட் அபராதம்
April 28, 2024, 12:40 pm
இந்தியாவில் கல்வி பயிலும் மலேசிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்: தூதரக அதிகாரி சுஷ்மா
April 28, 2024, 11:34 am
ஆம்புலன்ஸ் 6 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்தது: இருவர் காயம்
April 28, 2024, 11:23 am
சிலாங்கூர் மாநிலத்தின் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு விதி மீறல் அல்ல: மந்திரி புசார் விளக்கம்
April 28, 2024, 11:08 am
எதிர்க்கட்சி கூட்டணிக்கான வாக்குகள் பெரிய மாற்றத்தைக் கொண்டு வராது: டத்தோ ரமணன்
April 28, 2024, 10:47 am
ஜொகூர் ஃபோரெஸ் சிட்டியில் சூதாட்ட மையமா ? கருத்து பதிவிட்ட செகுபாட் கைது
April 28, 2024, 10:42 am