
செய்திகள் இந்தியா
ரஷிய போரில் இந்தியர்கள்: விடுவிக்க வலியுறுத்தல்
புது டெல்லி:
ரஷிய ராணுவத்தில் உதவியாளர்களாக பணியாற்றி வரும் இந்தியர்களை உடனடியாக விடுவிக்க இந்தியா வலியுறுத்தியுள்ளது.
உக்ரைனில் போர் பகுதியிலிருந்து விலகியிருக்குமாறு இந்தியப் பணியாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.
ரஷிய ராணுவத்தில் உதவியாளர்களாக உள்ள இந்தியர்களை தற்போது உக்ரைன் போர் பகுதியில் உயிருக்கு ஆபத்தான நிலையில் பணியாற்றி வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி, உக்ரைன் போர் பகுதியில் உயிருக்கு ஆபத்தான நிலையில் ரஷிய ராணுவத்தில் பணியாற்றி வரும் இந்திய பணியாளர்களை மீட்டு தாயகம் அழைத்துவர வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரண்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், ரஷிய ராணுவத்தில் இந்தியர்கள் சிலர் துணைப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
அவர்களை விரைந்து விடுவிக்குமாறு சம்பந்தப்பட்ட ரஷிய அதிகாரிகளை அங்குள்ள இந்திய தூதரகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. உக்ரைன் போர் பகுதியிலிருந்து விலகி இருக்குமாறு அனைத்து இந்தியப் பணியாளர்களையும் வெளியுறவு அமைச்சகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது' என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 14, 2025, 10:10 pm
மோடி பயணம் மணிப்பூருக்கு பெரும் அவமதிப்பு
September 14, 2025, 10:02 pm
பாலியல் குற்றச்சாட்டை பயோ டேட்டாவில் சேர்க்க உத்தரவிட்ட நீதிமன்றம்
September 14, 2025, 8:39 pm
வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது
September 14, 2025, 8:05 pm
upi பரிவர்த்தனை ரூ.10 லட்சமாக உயர்வு; என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?: ஒரு பார்வை
September 12, 2025, 8:56 pm
முஸ்லிம்களின் தலையை எடுப்போம்; வன்முறை தூண்டும் பேச்சு: பாஜக தலைவர் ரவி மீது வழக்கு
September 12, 2025, 8:42 pm
சிறுபான்மையினர் நிலை: ஐ.நா. வில் இந்தியாவுக்கு ஸ்விட்சர்லாந்து கேள்வி
September 10, 2025, 5:46 pm
நேபாளம் செல்லும் இந்தியர்களுக்கு எச்சரிக்கை
September 10, 2025, 3:17 pm
எலுமிச்சை பழத்தில் ஏற்றியபோது, ஷோரூம் முதல் மாடியிலிருந்து குப்புற விழுந்த புதிய கார்
September 9, 2025, 11:21 pm
தண்டனை காலத்துக்கு அதிகமாக சிறையில் அடைப்பு: ரூ.25 லட்சம் இழப்பீடு
September 9, 2025, 10:35 pm