![image](https://imgs.nambikkai.com.my/war.jpeg)
செய்திகள் இந்தியா
ரஷிய போரில் இந்தியர்கள்: விடுவிக்க வலியுறுத்தல்
புது டெல்லி:
ரஷிய ராணுவத்தில் உதவியாளர்களாக பணியாற்றி வரும் இந்தியர்களை உடனடியாக விடுவிக்க இந்தியா வலியுறுத்தியுள்ளது.
உக்ரைனில் போர் பகுதியிலிருந்து விலகியிருக்குமாறு இந்தியப் பணியாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.
ரஷிய ராணுவத்தில் உதவியாளர்களாக உள்ள இந்தியர்களை தற்போது உக்ரைன் போர் பகுதியில் உயிருக்கு ஆபத்தான நிலையில் பணியாற்றி வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி, உக்ரைன் போர் பகுதியில் உயிருக்கு ஆபத்தான நிலையில் ரஷிய ராணுவத்தில் பணியாற்றி வரும் இந்திய பணியாளர்களை மீட்டு தாயகம் அழைத்துவர வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரண்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், ரஷிய ராணுவத்தில் இந்தியர்கள் சிலர் துணைப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
அவர்களை விரைந்து விடுவிக்குமாறு சம்பந்தப்பட்ட ரஷிய அதிகாரிகளை அங்குள்ள இந்திய தூதரகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. உக்ரைன் போர் பகுதியிலிருந்து விலகி இருக்குமாறு அனைத்து இந்தியப் பணியாளர்களையும் வெளியுறவு அமைச்சகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது' என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 26, 2024, 6:05 pm
புவனேஸ்வர் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டது
July 25, 2024, 10:15 pm
நீட் தேர்வுக்கு எதிராக மேற்கு வங்க பேரவையில் தீர்மானம்
July 24, 2024, 5:33 pm
இந்தியா கூட்டணியினர் நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம்
July 24, 2024, 12:47 pm
நிபா வைரஸ் பரவல்: பொது முடக்கம் அறிவிப்பு
July 23, 2024, 5:24 pm
CROWDSTRIKE நிறுவனத்திற்கு ரூ.75,000 கோடி இழப்பு
July 23, 2024, 5:15 pm
காவடி ஊர்வலம் செல்லும் பாதை கடைகளில் உரிமையாளர் பெயர் எழுதும் உத்தரவுக்கு தடை
July 23, 2024, 4:52 pm
இந்தியாவில் அதிகரித்து வரும் உடல் பருமன் நோய்
July 23, 2024, 4:17 pm
ஆர்எஸ்எஸ் பயிற்சிகளில் அரசு அதிகாரிகள் பங்கேற்க இருந்த தடை 58 ஆண்டுகளுக்கு பிறகு நீக்கம்
July 23, 2024, 3:40 pm