நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தாய்லாந்து பேருந்து விபத்தில் 36 மலேசிய சுற்றுப் பயணிகள் காயம்

பேங்காக்:

தாய்லாந்தில் நடந்த பேருந்து விபத்தில் மலேசியாவைச் சேர்ந்த 36 சுற்றுப் பயணிகள் காயமடைந்தனர்.

இந்த விபத்து பேங்காக்கின் காஞ்சனபுரியில் பிற்பகல் 1.20 மணிக்கு நிகழ்ந்தது.

ஜொகூரில் இருந்து நான்கு முதல் 70 வயதுடைய மலேசியர்கள்  காஞ்சனபுரியில் உள்ள சஃபாரி பூங்காவிற்குச் சென்றது.

பேருந்து ஓட்டுநர் 10 சக்கர டிரக்கை முந்திச் செல்ல முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்து பேருந்து சாலையை விட்டு விலகிச் சென்றபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

இதில் பேருந்தில் பயணித்த சுற்றுப்பயணிகள் காயமடைந்தனர்.

அதே வேளையில் தாய்லாந்து பிரஜைகளான பஸ் ஓட்டுநர், சுற்றுலா வழிகாட்டி ஆகியோரும் காயமடைந்தனர்.

இதில் சிறு காயங்களுக்கு உள்ளான மற்ற 35 மலேசியர்கள் சிகிச்சைக்குப் பிறகு தங்களுடைய ஹோட்டலுக்குத் திரும்பினர் என்று சுற்றுலா குழுவைச் சேர்ந்த ஹிஸ்யாம் ரஹீம் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset