நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போலி அடையாள அட்டையைப் பயன்படுத்தி 29 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணியாற்றிய ஆடவருக்கு சிறை

கெனிங்காவ்:

போலி அடையாள அட்டையைப் பயன்படுத்தி 29 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய ஆடவருக்கு சிறை, அபராதம் விதிக்கப்பட்டது.

தெனோமில் உள்ள பள்ளியில் சம்பந்தப்பட்ட ஆடவர் பணியாற்றி வந்தார்.

29 வயதில் இருந்து அவர் அப் பள்ளியில் பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் அவர் போலி அடையாள அட்டையை பயன்படுத்தியது தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

அவர் மீதான வழக்கு விசாரணை நீதிபதி நூர் அஸ்ராபொ சூல்ஹானி முன்னிலையில் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

தம்மீதான குற்றச்சாட்டை 53 வயதுடைய ரிடால் அப்துல் காடிர் ஒப்புக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து அவருக்கு 10 மாதம்  சிறை, 6 ஆயிரம் வெள்ளி அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset