செய்திகள் மலேசியா
ஃபிரன்சாய்ஸ் வர்த்தகத்தில் கால்பதிப்பவர்களுக்கு வழிகாட்டுகிறது பெர்னாஸ்: டத்தோ ரமணன்
கோலாலம்பூர்:
ஃபிரன்சாய்ஸ் வர்த்தகத்தில் கால்பதிப்பவர்களுக்கு பெர்னாஸ் தொடர்ந்து வழிகாட்டி வருகிறது.
இந்த வாய்ப்புகளை இந்திய சமுதாயம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவுத் துறை துணையமைச்சர் டத்தோ ரமணன் கூறினார்.
பெர்னாஸ் எனப்படும் பெர்பாடானான் நேஷ்னல் பெர்ஹாட் கடந்த 1969ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
கடந்த 2000ஆம் ஆண்டு முதல் ஃபிரன்சாய்ஸ் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கு பெர்னாஸ் உரிய வழிகாட்டல்களை வழங்கி வருகிறது.
குறிப்பாக பயிற்சிகள், நிதியுதவுகள் உட்பட அனைத்து உதவிகளையும் பெர்னாஸ் வழங்கி வருகிறது.
இதுவரை 5,590 தொழில் முனைவர்களை பெர்னாஸ் உருவாக்கி உள்ளது. 35ஆயிரம் வேலை வாய்ப்புகளை பெர்னாஸ் உருவாக்கி உள்ளது.
நாட்டில் முன்னணி ஃபிரன்சாய்ஸ் நிறுவனங்களும் பெர்னாஸுடன் இணைந்து செயல்படுகின்றன.
அவ்வகையில் இவ்வாண்டு மேலும் 5 ஆயிரம் ஃபிரன்சாய்ஸ் தொழில் முனைவர்களை உருவாக்க பெர்னாஸ் திட்டமிட்டுள்ளது.
ஃபிரன்சாய்ஸ் தொழில் துறையில் ஆர்வம் உள்ள இந்தியர்கள் இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று டத்தோ ரமணன் கூறினார்.
ஃபிரன்சாய்ஸ் தொழில் துறையில் ஆர்வம் உள்ள எந்த சமூகமாக இருந்தாலும் அவர்களுக்கு வழிகாட்ட பெர்னாஸ் தயாராக உள்ளது.
இதில் எந்த பாகுபாடும் பார்க்கப்படாது என்று பெர்னாஸ் தலைவர் டத்தோ அஸிமா கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 27, 2024, 3:23 pm
நாசிகண்டார் உணவகத்தின் மீது சிவப்பு சாயம் வீசிய 3 பேரை போலீசார் தேடுகின்றனர்
April 27, 2024, 3:22 pm
முதியோர் தாக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்த முதியோர் இல்லம் பதிவு செய்யப்படாதது: நான்சி சுக்ரி
April 27, 2024, 3:20 pm
மசீச தொடர்ந்து ஒற்றுமை அரசாங்கத்தை ஆதரிக்கும்: சைஃபுடின்
April 27, 2024, 3:19 pm
தேசிய முன்னணி அதிக அர்ப்பணிப்பைக் காட்டுகிறது: அந்தோனி லோக்
April 27, 2024, 3:16 pm
கோல குபு பாரு தொகுதியை தேசியக் கூட்டணி வெல்லும் என 110 சதவீதம் நம்பிக்கை உள்ளது: மொஹைதின்
April 27, 2024, 3:10 pm
கோல குபு பாரு வேட்புமனு தாக்கல் சீராக நடைபெற்றது: மாநில போலிஸ் துணைத் தலைவர் டத்தோ சசிகலா தேவி
April 27, 2024, 2:35 pm
எங்களிடம் எம்ஏசிசி விசாரணை மேற்கொள்ளவில்லை: மிர்சான், மொக்ஸானி
April 27, 2024, 2:35 pm