நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சொத்துகளை அறிவிக்க மிர்சான் மகாதீருக்கு 30 நாள் கெடு: எம்ஏசிசி

புத்ராஜெயா:

சொத்துகளை அறிவிக்க மிர்சான் துன் மகாதீருக்கு மேலும் 30 நாட்கள் காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது என்று எம்ஏசிசி தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி கூறினார்.

மிர்சான் தனது சொத்துக்களை ஊழல் தடுப்பு நிறுவனத்திடம் அறிவிக்க உத்தரவு வழங்கப்பட்டது.

எம்ஏசிசி சட்டத்தின் 36ஆவது பிரிவின் படி அவருக்கும் அவரது இளைய சகோதரர் மொக்ஸானிக்கும் வழங்கப்பட்ட உத்தரவுக்கு இணங்க தொழிலதிபர் கால அவகாசம் கேட்டார்.

இதன் அடிப்படையில் அவருக்கு மேலும் 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த  நாட்களுக்குள் அவர் சொத்தை அறிவிக்க வேண்டும் என்று டான்ஸ்ரீ அஸாம் பாக்கி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset