நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அமெரிக்க கன்சாஸ் நகரத்தில் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி 22 பேர் காயம்

கன்சாஸ்:

அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 21 பேர் காயமடைந்துள்ளனர்.

கன்சாஸ் நகரத்தில் இடம்பெற்ற அணிவகுப்பின் இறுதியிலேயே superbowl parade  துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஒரு மில்லியனிற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட இந்த நிகழ்வில் இறுதியில் இடம்பெற்ற வன்முறையை தொடர்ந்து மக்கள் அச்சத்தில் அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளனர்.

துப்பாக்கி சூட்டு சம்பவத்தினை தொடர்ந்து 22 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் பல சிறுவர்கள் உள்ளனர்.

எட்டு பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மூவரை கைது செய்துள்ள அதிகாரிகள் ஆயுதங்களை கைப்பற்றியுள்ளனர். உயிரிழந்த பெண் ஒரு டிஜே என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆதாரம்: வாஷிங்டன் போஸ்ட்

தொடர்புடைய செய்திகள்

+ - reset