செய்திகள் இந்தியா
நாடாளுமன்றத்தில் இருந்து திமுக வெளிநடப்பு
புது டெல்லி:
தமிழகம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குறித்து விவாதிக்க மக்களவையின் கடைசி நாளில் அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக வெளிநடப்பு செய்தது. மாநிலங்களவையிலும் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் நடைபெற்ற ராமர் கோயில் குறித்த சிறப்பு விவாதத்திலும் திமுக பங்கேற்கவில்லை.
இந்த விவாதம் தொடங்கும் முன் திமுக உறுப்பினர்கள், தமிழக நிவாரண நிதி, மீனவர் பிரச்னைகளை குறிப்பிட்டு கோஷமிட்டனர்.
அப்போது பேசிய டி.ஆர். பாலு, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து செல்லும் விவகாரம் குறித்து பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம் அனுப்பியுள்ளார். ஆனால் பிரதமர் இதுவரை சாதகமாக பதிலளிக்கவில்லை என்றார்.
அப்போது மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, முக்கியமான தலைப்பில் விவாதம் நடைபெற உள்ளதால் அனுமதியில்லை என்றார்.
இதைக் கண்டித்து திமுக உறுப்பினர்கள் கோஷமிட்டு மக்களவையிலிருந்து வெளியேறினர்.
மாநிலங்களவையிலும் இதேபோல் தமிழக பிரச்சனைகளை விவாதிக்க அனுமதி அளிக்காததால் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 27, 2024, 7:43 am
மக்களவைத் தேர்தல்: 88 தொகுதிகளில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு முடிந்தது
April 26, 2024, 7:34 pm
மணிப்பூர் வன்முறை, பிபிசி அலுவலக சோதனைக்கு அமெரிக்கா விமர்சனம்: இந்தியா எதிர்ப்பு
April 26, 2024, 7:24 pm
சொத்து வாரிசுரிமை வரியை ராஜீவ் காந்தி ஒழித்தது ஏன்?: மோடி அவதூறு கருத்து
April 25, 2024, 6:40 pm
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை கண்டு பிரதமர் மோடி அஞ்சிவிட்டார்: ராகுல்
April 25, 2024, 6:15 pm
முஸ்லிம்களுக்கு எதிரான இனத்துவேஷ கருத்து: மோடியை விமர்சித்த பாஜக நிர்வாகி நீக்கம்
April 25, 2024, 6:09 pm
மக்களவைத் தேர்தலில் அகிலேஷ் திடீர் போட்டி
April 25, 2024, 5:44 pm
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வாரிசு வரியை அமல்படுத்தும்: மோடி மீண்டும் அவதூறு பேச்சு
April 23, 2024, 4:43 pm
பெரும் போராட்டத்திற்கு பிறகு இறுதியில் கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது: ஆம் ஆத்மி
April 23, 2024, 4:38 pm
மேற்கு வங்கத்தில் 25,753 அரசு பள்ளி ஆசிரியர்கள் பணி நியமனம் ரத்து
April 23, 2024, 8:35 am