
செய்திகள் விளையாட்டு
இலங்கைக்கு பயம் காட்டிய ஆப்கன்: உலக சாதனை படைத்த நபி-ஓமர்சாய் ஜோடி
கொழும்பு:
ஆப்கானிஸ்தான் அணி தற்பொழுது இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடரில் காயம் குணமடையாத காரணத்தினால் ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ரஷித் கான் இடம் பெறவில்லை.
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று நடைபெற, போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இலங்கை அணியின் துவக்க ஜோடி 182 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. அவிஷ்கா பெர்னாடோ 88 பந்துகளில் 88 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து குசால் மெண்டிஸ் 16, சதிர சமர விக்ரமா 44, சரித் அசலங்கா 7* ரன்கள் எடுத்தார்கள்.
இன்னொரு முனையில் நிலைத்து நின்று விளையாடிய துவக்க ஆட்டக்காரர் பதும் நிசாங்கா 139 பந்துகளில் 20 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் ஆட்டம் இழக்காமல் 210 ரன்கள் குவித்தார். இலங்கைக்கு அதிகபட்ச ரன் அடித்திருந்த சனத் ஜெயசூர்யாவின் சாதனையை 24 ஆண்டுகள் கழித்து முறியடித்தார்.
50 ஓவர்கள் விளையாடிய இலங்கை அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 381 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் பரீத் அகமது இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.
பெரிய இலக்கை நோக்கி விளையாடிய ஆப்கானிஸ்தான் அணிக்கு ஆரம்பத்திலேயே பிரமோத் மதுஷன் 3 மற்றும் சமீரா 2 விக்கெட் என 55 ரன்களுக்கு 5 விக்கெட் கைப்பற்றி பெரிய நெருக்கடியை கொடுத்தார்கள்.
இதற்கு அடுத்து முன்னாள் அனுபவ வீரர் முகமது நபி மற்றும் இளம் ஆல் ரவுண்டர் அசமத்துல்லா ஓமர்சாய் இணைந்து ஆரம்பத்தில் பொறுமையாக விளையாடும் அரை சதம் அடித்து. அதற்கு அடுத்து அதிரடியாக விளையாட ஆரம்பித்தார்கள்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஜோடியில் இருவருமே சதம் அடித்து அசத்தினார்கள். ஐந்தாவது விக்கெட்டுக்கு மொத்தமாக 242 ரன்கள் சேர்த்து உலக சாதனை படைத்த இந்த ஜோடியில் முகமது நபி 130 பந்துகளில் 15 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் உடன் 136 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஓமர் சாய் ஆட்டம் இழக்காமல் 115 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் உடன் 149 ரன்கள் எடுத்து களத்தில் நின்றார். 50 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 339 ரன்கள் எடுத்தது.
- ருஷ்டி
தொடர்புடைய செய்திகள்
September 13, 2025, 1:50 pm
தேசிய தலைமை கராத்தே பயிற்சியாளராக ஷர்மேந்திரன் நியமிக்கப்பட்டார்
September 13, 2025, 10:44 am
எம்பாப்பேவை நோக்கி குரங்கு சைகைகளுடன் கேலி செய்த ஓவியோடோ ரசிகர் கைது
September 12, 2025, 7:25 am
போர்த்துகலில் எல்லா காலத்திலும் சிறந்தவர் வீரராக ரொனால்டோ தேர்ந்தெடுக்கப்பட்டார்
September 11, 2025, 8:15 am
யமால் கிட்டத்தட்ட பாயர்ன் முனிச் அணிக்கு சொந்தமாகி விட்டார்
September 11, 2025, 8:12 am
பிரேசிலை வீழ்த்திய பொலிவியா: உலகக் கிண்ண வாய்ப்பு தக்கவைப்பு
September 10, 2025, 8:12 am
உலகக் கிண்ண தகுதி சுற்று ஆட்டம்: போர்த்துகல் வெற்றி
September 10, 2025, 8:09 am
உலகக் கிண்ண தகுதி சுற்று ஆட்டம்: இங்கிலாந்து அபாரம்
September 9, 2025, 6:03 pm
டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கிண்ண சிலம்பப் போட்டியில் 300 போட்டியாளர்கள் பங்கேற்பு: அன்ட்ரூ டேவிட்
September 9, 2025, 10:29 am