நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தாயிஃப் கோலாலம்பூரில் உள்ளார்; தனியார் மருத்துவமனையில் சிகிச்சை: ஐஜிபி

கோலாலம்பூர்:

சரவா மாநில முன்னாள் ஆளூநர் துன் தாயிஃப் மஹ்மூத் தற்போது கோலாலம்பூரில் உள்ளார். 

தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார் என்று தேசிய போலீஸ் தலைவர் டான்ஶ்ரீ ரஸாருடின் உறுதிப்படுத்தினார்.

பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுக்கும் தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்று அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

குற்றவியல் சட்டத்தின் 336ஆவது பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டது.

அதில் தாயிஃப்  மருத்துவமனையில் இருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் போலிஸ் அறிக்கை உண்மையான அறிக்கை என்று ரஸாருதீன் கூறினார்.  

விசாரணை ஆவணங்கள் சரவாக் மாநில அரசு வழக்குரைஞர் அலுவலகத்திற்கு நேற்று அனுப்பப்பட்டன.

மேலும் அதன் அறிவுறுத்தல்களுக்காக இன்னும் காத்திருக்கிறோம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset