நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆம்புலன்ஸை பின் தொடர்ந்து சென்ற அமைச்சரின் கார் விவகாரம் விளக்கப்படும்: அந்தோனி லோக்

கோலாலம்பூர்:

ஆம்புலன்ஸை பின் தொடர்ந்து சென்ற அமைச்சரின் கார் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் முழு விளக்கம் தரப்படும்.

இதனை போக்குவரத்துறை அமைச்சர் அந்தோனி லோக் கூறினார்.

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் சிம்பாங் பூலாய் அருகே அமைச்சரின் அதிகாரப்பூர்வ கார் ஒன்று ஆம்புலன்ஸை பின் தொடர்ந்து சென்றுள்ளது.

இந்த விவகாரம் தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.

இச்சம்பவம் குறித்து முழுமையாக விளக்கங்கள் தரப்படும். அதுவரை அனைவரும் பொறுமைக்காக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

முன்னதாக சம்பந்தப்பட்ட அமைச்சரின் செயல் கண்டிக்கத்தக்கது. குறிப்பாக மற்றவர்களுக்கு இது அச்சுறுத்தலை ஏற்ப்படுத்தியுள்ளது.

ஆகவே சம்பந்தப்பட்ட அமைச்சர் யார் என்ற தகவலை அந்தோனி லோக் வெளியிட வேண்டும் என மசீச இளைஞர் அணி துணைத் தலைவர் சோங் இயூ சுவான் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset