நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கைவிடப்பட்ட 733 அந்நிய தொழிலாளர்களுக்கு 1 மில்லியன் ரிங்கிட் சம்பளம்

புத்ராஜெயா:

ஜொகூரில் கைவிடப்பட்ட 733 அந்நிய தொழிலாளர்களுக்கு 1,035,557.50 ரிங்கிட் சம்பளமாக வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதனை மனிதவள அமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக உறுதிப்படுத்தியது.

வேலைக்காக அழைத்து வரப்பட்ட அத்தொழிலாளர்கள் அனைவரும் ஏமாற்றப்பட்டனர்.

இதனால் அதிருப்தியடைந்த அத்தொழிலாளர்கள் அனைவரும் சாலையில் நடந்து வந்து பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தினர்.

இவ்விவகாரத்தில் தீபகற்ப மலேசியா மனிதவளத் துறை, முதலாளிகள், பணியாளர்களிடையே சமரசம் காணப்பட்டது.

வங்காளதேச தூதரக அதிகாரிகள் முன்னிலையில் இது நடந்தது.

சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு மொத்தம்  1,035,557.50 ரிங்கிட்டை சம்பளமாக வழங்க இணக்கம் காணப்பட்டது.

மேலும் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு வேறு வேலை பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது என்று மனிதவள அமைச்சு கூறியது.

-பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset