நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

துன் டாய்ம் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படலாம்: டான்ஶ்ரீ அஸாம் பாக்கி

புத்ராஜெயா:

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணையில் உதவும் நோக்கில்  முன்னாள் நிதியமைச்சருக்கு துன் டாய்ம் ஜைனுடினை மீண்டும் விசாரணைக்கு அழைக்கபடலாம் என்று எம்ஏசிசி தலைமை ஆணையர் டான்ஶ்ரீ அஸாம் பாக்கி கூறினார்.

துன் டாய்மிடம் இன்னும் அறிவிக்கப்படாத சொத்துகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரானைகள் நடத்தப்படலாம்.

எம்ஏசிசியின் விசாரணை அதிகாரிகள் சமீபத்தில் டாய்ம்க்கு சொந்தமான சொத்துக்கள் பற்றிய புதிய தகவலைப் பெற்றனர்.

இப்போது அந்த சொத்துக்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை  விசாரிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

துன் டாய்முக்கு எதிராக இன்னும் விசாரணைகள் நடந்து கொண்டிருக்கிறது. அவர் அறிவிக்காதசொத்துக்களை  அதிகாரிகள்  சரிபார்க்க வேண்டியுள்ளது,

இதன் அடிப்படையில் அவர் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset