நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிப்பாங் மஇகா தொகுதி மீண்டும் வலுப்பெறும்: டத்தோ இப்ராஹிம் ஷா நம்பிக்கை 

சைபர்ஜெயா:

சிப்பாங் மஇகா தொகுதி மீண்டும் வலுப்பெறும் என்று டத்தோ இப்ராஹிம் ஷா கூறினார்.

மஇகாவில் அதிக கிளைகள் கொண்ட தொகுதியாக சிப்பாங் தொகுதி விளங்கி வந்தது. ஆனால் தற்போது 130 கிளைகளில் இருந்து 70 கிளைகளுக்கு குறைந்து விட்டது.

கிளைகள் குறைந்தாலும் சிப்பாங் தொகுதி இன்னும் வலுவாகத்தான் உள்ளது.

வரும் காலங்களில் இது மேலும் வலுப்பெற்று ஆற்றல்மிக்க தொகுதியாக மலரும் என்று மஇகா சிப்பாங் தொகுதியின் விருந்து நிகழ்வில் பேசிய ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான டத்தோ இப்ராஹிம் ஷா மேற்கண்டவாறு கூறினார்.

இந்த நிகழ்வு மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ எம். சரவணன் தலைமையில் நடைபெற்றது.

சிப்பாங் தொகுதியில் வாழும் இந்திய மக்களின் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் இந்த விருந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset