செய்திகள் மலேசியா
மித்ராவின் நிதி அதிகரிக்கப்பட வேண்டும் என்ற எனது முயற்சியை பிரபாகரன் தொடர்வார் என நம்புகிறேன்: டத்தோ ரமணன் நம்பிக்கை
பெட்டாலிங்ஜெயா:
மித்ராவின் நிதி அதிகரிக்கப்பட வேண்டும் என்ற எனது முயற்சியை அதன் புதிய தலைவர் பிரபாகரன் தொடர்வார் என நம்புகிறேன். தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோ ரமணன் கூறினார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் என் மீது நம்பிக்கை வைத்து மித்ரா பணிக் குழுவின் தலைவராக நியமித்தார்.
அவரின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் உரிய திட்டங்களை வகுத்து அதை வெற்றிகரமாக செய்து முடித்தேன்.
குறிப்பாக மித்ராவின் 100 மில்லியன் ரிங்கிட் முழுமையாக பயன்படுத்தப்பட்டது. அதற்கான கணக்குகள் அனைத்தும் மித்ரா அகப்பக்கத்தில் வெளியிடப்பட்டது.
அதே வேளையில் இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்கு 100 மில்லியன் ரிங்மிட் போதாது.
அதற்கான நிதி அதிகரிக்கப்பட வேண்டும் என முயற்சிகளை மேற்கொண்டேன். தற்போது துணையமைச்சராக பொறுப்பேற்றுள்ளேன்.
இதனால் அந்த பதவிக்கு பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரனை பிரதமர் நியமித்துள்ளார்.
இவ்வேளையில் அவருக்கு எனது வாழ்த்துகள். கண்டிப்பாக நிறைய திட்டங்கள், இலக்குகளை அடிப்படையாக கொண்டு அவர் இந்த பொறுப்பை ஏற்றிருப்பார். அவரின் முயற்சிகள் வெற்றி பெற எனது வாழ்த்துகள்.
அதே வேளையில் மித்ராவின் நிதியை உயர்த்துவதற்கான முயற்சிகளையும் அவர் மேற்கொள்வார் என நம்புகிறேன் என்று டத்தோ ரமணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2024, 6:11 pm
பாங்கின் கல்வித் தேர்ச்சி குறித்து கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சியின் நோக்கம் என்ன?: தியோ நீ சிங்
April 29, 2024, 6:09 pm
உலுசிலாங்கூரின் 5 தோட்டப் பிரச்சினையை மாநில அரசு கைவிடவில்லை: பாப்பாராயுடு
April 29, 2024, 6:08 pm
மக்கள் பிரச்சினைகளில் மலேசிய மக்கள் சக்தி கட்சி கவனம் செலுத்தும்: டத்தோஶ்ரீ தனேந்திரன்
April 29, 2024, 6:07 pm
நெகிரி செம்பிலான் மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆதி. குமணன் நினைவு விழா 2024
April 29, 2024, 5:39 pm
ஓப்ஸ் பகார் லாவுட் சோதனை நடவடிக்கை: 178 கைது, 15 மில்லியன் வெள்ளி பறிமுதல்: சைஃபுடின்
April 29, 2024, 5:24 pm
உலக வங்கியின் அறிக்கை குறித்து விளக்கமளிப்பதை கல்வியமைச்சர் தவிர்த்துள்ளார்
April 29, 2024, 5:23 pm
போதைப்பொருள் கடத்தல் கும்பலில் ஈடுபட்ட காதலர் ஜோடி கைது
April 29, 2024, 5:20 pm
கால்நடைகள் கடத்தப்படும் நடவடிக்கைகள் முறியடிக்கப்படும்: மாட் சாபு
April 29, 2024, 3:21 pm