நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மித்ராவின் நிதி அதிகரிக்கப்பட வேண்டும் என்ற எனது முயற்சியை பிரபாகரன் தொடர்வார் என நம்புகிறேன்: டத்தோ ரமணன் நம்பிக்கை

பெட்டாலிங்ஜெயா:

மித்ராவின் நிதி அதிகரிக்கப்பட வேண்டும் என்ற எனது முயற்சியை அதன் புதிய தலைவர் பிரபாகரன் தொடர்வார் என நம்புகிறேன். தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோ ரமணன் கூறினார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் என் மீது நம்பிக்கை வைத்து மித்ரா பணிக் குழுவின் தலைவராக நியமித்தார்.

அவரின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் உரிய திட்டங்களை வகுத்து அதை வெற்றிகரமாக செய்து முடித்தேன்.

குறிப்பாக மித்ராவின் 100 மில்லியன் ரிங்கிட் முழுமையாக பயன்படுத்தப்பட்டது. அதற்கான  கணக்குகள் அனைத்தும் மித்ரா அகப்பக்கத்தில் வெளியிடப்பட்டது.

அதே வேளையில் இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்கு 100 மில்லியன் ரிங்மிட் போதாது.

அதற்கான நிதி அதிகரிக்கப்பட வேண்டும் என முயற்சிகளை மேற்கொண்டேன். தற்போது துணையமைச்சராக பொறுப்பேற்றுள்ளேன்.

இதனால் அந்த பதவிக்கு பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரனை பிரதமர் நியமித்துள்ளார்.

இவ்வேளையில் அவருக்கு எனது வாழ்த்துகள். கண்டிப்பாக நிறைய திட்டங்கள், இலக்குகளை அடிப்படையாக கொண்டு அவர் இந்த பொறுப்பை ஏற்றிருப்பார். அவரின் முயற்சிகள் வெற்றி பெற எனது வாழ்த்துகள்.

அதே வேளையில் மித்ராவின் நிதியை உயர்த்துவதற்கான முயற்சிகளையும் அவர் மேற்கொள்வார் என நம்புகிறேன் என்று டத்தோ ரமணன் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset