நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிகேஆரை விட்டு வெளியேற சுரேந்திரனுக்கு உரிமையுள்ளது: ஃபஹ்மி

பெட்டாலிங் ஜெயா:

பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எ.சுரேந்திரன் நேற்று பிகேஆர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். 

இந்நிலையில், கட்டியிலிருந்து சுரேந்திரன் விலகுவது அவரது தனிப்பட்ட விருப்பம் என்றும் அஃது அவரின் உரிமை என்றும் பிகேஆர் கட்சியின் தகவல் தொடர்பு தலைவர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார். 

முன்னாள் பிகேஆர் துணைத் தலைவர் கட்சியில் செயல்படாததால், அத்தகைய முடிவை எடுக்க அவருக்கு உரிமை இருப்பதாக ஃபஹ்மி கூறினார்.

14-ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் கட்சியின் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்று ஃபஹ்மி குறிப்பிட்டார். 

மேலும், கட்சியிலிருந்து விலகும் அவரின் முடிவைத் தாம் மதிப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset