நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

அஜீத் பவார் அணிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

புது டெல்லி:

அஜீத் பவார் தலைமையிலான அணியே உண்மையான தேசியவாத காங்கிரஸ் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனால் தேசியவாத காங்கிரஸ் கட்சியை நிறுவிய சரத் பவாரிடம் இருந்து அவருடைய அண்ணன் மகனான அஜீத் பவாருக்கு சென்றுள்ளது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேர்தல் சின்னமான சுவர் கடிகாரம் சின்னத்தை அஜீத் பவார் தலைமையிலான அணிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது.

பெரும்பான்மை எம்எல்ஏக்களின் பலத்தை வைத்து இதை முடிவு செய்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேசியவாத காங்கிரஸில் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கும், அஜீத் பவாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அஜீத் பவார் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை, பாஜக கூட்டணி அரசுக்கு ஆதரவளித்து துணை முதல்வரானார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset