நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜீப்புடன் விவாதம் செய்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை: ராம் கர்ப்பால்

கோலாலம்பூர்:

நஜீப்புடன் விவாதம் செய்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று புக்கிட் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்ப்பால் சிங் கூறினார்.

அரச மன்னிப்பு தாம் தகுதியானவரா என்பது குறித்து பொது விவாதம் நடத்த தயாரா என்று முன்னாள் பிரதமர் நஜீப் சவால் விடுத்துள்ளார்.


இந்த வழக்கில் குற்றவாளியாகக் காணப்படும் நஜீப் ரசாக்குடன் விவாதம் செய்வதற்கான சவாலை ஏற்றுக் கொள்வது நேரத்தை வீணடிக்கும் செயலாகும்.

நஜீப்புடன் விவாதம் செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை.

ஏனெனில் நீதிமன்றத்தின் பெரும்பான்மை தீர்ப்பு அவர் குற்றவாளி என்று அறிவித்தது. 

உண்மையில், மன்னிப்பு வாரியமும் தண்டனையை உறுதி செய்தது என்றார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset