நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரச மன்னிப்பு விவகாரத்தில் பொது விவாதம் நடத்த தயாரா?: ராம் கர்பாலுக்கு நஜீப் சவால்

கோலாலம்பூர்:

மன்னிப்புக்கு தாம் தகுதியானவரா என்பது குறித்து விவாதிக்க ராம் கர்ப்பால் பொது விவாதத்திற்கு தயாரா என்று முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜீப் சவால் விடுத்துள்ளார்.

புக்கிட் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்பால் சிங் தாம் விண்ணப்பித்த அரச மன்னிப்பு விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த விவகாரத்தில் பொது விவாதம் நடத்த நான் தயாராக உள்ளேன். அவர் தயாரா என்று நஜீப் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

நான் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் வழக்கின் உண்மைகளை பலர் புரிந்து கொள்ளவில்லை.

மேலும் நீதிமன்ற நடவடிக்கைகளை அவர்கள் நெருக்கமாகப் பின்பற்றவில்லை.

இதன் அடிப்படையில் தாம் இந்த சவாலை விடுவதாக அவர் கூறினார்.

முன்னதாக எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் வழக்கில் நஜீப்பிற்கு எதிரான குற்றத்தின் கண்டுபிடிப்புகள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவை என்று ராம்கர்பால் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset