நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜீப்பிற்கு முழு மன்னிப்பு கோரி 17ஆவது மாமன்னரிடம் அம்னோ முறையிடும்: லொக்மான்

கோலாலம்பூர்:
நஜீப்பிற்கு முழு மன்னிப்பு கோரி  17ஆவது மாமன்னரிடம் அம்னோ முறையிடும்.

இதனை அம்னோ உச்சமன்ற உறுப்பினர் டத்தோ லொக்மான் நோர் அடாம் கூறினார்.

எஸ்ஆர்சி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜீப் துன் ரசாக் அரச மன்னிப்பு கோரியிருந்தார்.

ஆனால் அவருக்கு மன்னிப்பு வழங்கப்படாமல், தண்டனை பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் மாமன்னரின் இந்த முடிவை இந்த முடிவை அம்னோ வரவேற்கிறது.

அதே வேளையில் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யக் கோரி நாட்டின் 17ஆவது மாமன்னர் சுல்தான் இப்ராஹிமிடம் அம்னோ முறையீடு செய்யும்.

அதே வேளையில் அவருக்கு முழு மன்னிப்பு வழங்கப்படுவதற்கான முயற்சிகளையும் அம்னோ மேற்கொள்ளும் என்று லொக்மான் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset