செய்திகள் மலேசியா
குயில் ஜெயபக்தி நிறுவனத்திற்கு தமிழ் இலக்கிய மரபுக் காவலர் விருது
கோலாலம்பூர்:
சென்னை உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சியில் தமிழ் இலக்கிய மரபுக் காவலர் என்ற கௌரவ விருது தமிழகத்தின் கல்வித்துறை, பொது நூலக அமைப்பின் சார்பாக ஆசியாவின் மிகப்பெரிய தமிழ்ப் புத்தகாலயமான ஜெயபக்தி பதிப்பகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது
மலேசிய திருநாட்டில் தமிழ் இலக்கியத்தைப் பாதுகாப்பதிலும் ஊக்குவிப்பதிலும் முக்கிய பங்கு வகித்து, இலக்கியத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய குயில் ஜெயபக்தி நிறுவனத்திற்கு தமிழ் இலக்கிய மரபுக் காவலரின் விருது வழங்கப்பட்டிருப்பது மிகப்பெரிய அங்கீகாரமாகும்.
மலேசியாவில் தமிழ் மொழியில் நிபுணத்துவம் பெற்ற புத்தக விற்பனையாளராக ஜெயபக்தி நிறுவனம் விளங்கிக் கொண்டிருக்கிறது.
மலேசியாவில் தமிழ்மொழி வளர்ச்சிக்கு ஜெயபக்தி நிறுவனத்தின் அளப்பரிய சேவையை அங்கீகரிக்கும் வகையிலும் மேலும் நீண்டகால சேவையின் அடிப்படையில் இந்த விழாவில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ டாக்டர் கு. செல்வராஜ் இந்த விருதினை நேரில் பெற்றுக் கொண்டார்.
தமிழ் இலக்கியத்தின் பாரம்பரியக் காவலரின் கெஸ்ட் ஆஃப் கெஸ்ட் விருது பெரும் மரியாதையைக் குறிக்கிறது என்று தமிழ்நாடு அரசின் பொது நூலக இயக்குனர் மற்றும் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கே. இளம்பாரதி தெரிவித்தார்.
தமிழ் இலக்கியத்தில் ஜெயபக்தியின் அர்ப்பணிப்புக்காக இலக்கியச் சமூகம் வைத்திருக்கும் பாராட்டாக இது விளங்குகிறது.
ஜெயபக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த மரியாதைக்குரிய நிகழ்வு, அதன் அந்தஸ்தை பெரிதும் மேம்படுத்துவதோடு மகத்தான பங்களிப்பையும் வழங்கும் என்று சொன்னார்.
இதனிடையே தமிழ் நாடு அரசால் குயில் ஜெயபக்தி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட இந்த விருது மிகப்பெரிய அங்கீகாரமாக விளங்குகிறது என்று குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ டாக்டர் செல்வராஜ் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 14, 2026, 9:01 pm
நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவி விவகாரம்; பின்னர் முடிவு செய்யப்படும்: ஹம்சா
February 14, 2026, 9:00 pm
2025ஆம் ஆண்டில் 6.65 பில்லியன் ரிங்கிட்டை சொக்சோ இழப்பீடுகளாக வழங்கியுள்ளது: டத்தோஸ்ரீ ரமணன்
February 14, 2026, 7:03 pm
கடற்கரையில் போதைப்பொருள் ஊசிகள் கண்டெடுப்பு: காவல்துறை விசாரணையை மேற்கொள்கிறது
February 14, 2026, 6:03 pm
அதிகாலையில் தீ விபத்து: நான்கு வாகனங்கள் முற்றாக எரிந்து நாசம்
February 14, 2026, 6:00 pm
திறந்த வெளி எரிப்பை தவிர்க்க வேண்டும்: தீயணைப்பு துறை எச்சரிக்கை
February 14, 2026, 5:59 pm
நான் தான் இப்போது மொஹைதினின் முதல் எதிரி: ஹம்சா
February 14, 2026, 5:58 pm
மலேசிய திராவிட கழகத்தின் பொங்கல் விழா
February 14, 2026, 5:57 pm
இந்திய முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காக பெர்மிம் அமைச்சுகளுடன் இணைந்து செயல்படும்: அஸ்மான்
February 14, 2026, 5:56 pm
மலேசிய எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு அதிகாரிகளின் அதிரடி சோதனை: சட்டவிரோத இறக்குமதி பொருள்கள் பறிமுதல்
February 14, 2026, 5:54 pm
