செய்திகள் மலேசியா
மலேசியாவில் பொங்கல் ஒற்றுமை விழாவாக கொண்டாடப்பட வேன்டும்: தாமோதரன்
கோலாலம்பூர்:
நமது பாரம்பரியத்தை தொடர்ந்து பாதுகாக்கும் நோக்கில் பொங்கல் விழா பரவலாக கொண்டாடப்பட வேண்டும்.
குறிப்பாக மலேசியாவில் இந்த பொங்கல் ஒற்றுமை விழாவாக கொண்டாடப்பட வேண்டும் என்று பேரின்பம் மலேசியா இயக்கத்தின் தலைவர் யு. தாமோதரன் கூறினார்.
பேரின்பம் மலேசியா ஏற்பாட்டில் பொங்கல் தமிழர் திருநாள் விழா செராஸில் சிறப்பான முறையில் நடைபெற்றது.
பொங்கல் வைக்கப்பட்டதுடன் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளும் இந்த நிகழ்வில் இடம் பெற்றிருந்தன.
சுற்று வட்டார மக்கள் இந்நிகழ்வில் திரளாக கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் பேசிய தாமோதரன், பொங்கலுக்கு சமய விழா என முத்திரை குத்தக் கூடாது. காரணம் பொங்கல் உழவர், அறுவடை திருவிழாவாகும்.
மலேசியாவில் அதை ஒற்றுமை விழாவாக கொண்டாடப்பட வேண்டும்.
குறிப்பாக பல்லின மக்கள் இந்த பொங்கல் விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 4:50 pm
வேலையில்லா பிரச்சனைகளுக்கு அரசாங்கம் தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது: சிவநேசன்
May 5, 2024, 11:26 am
தகாத முறையில் பேசியதற்காக வருந்துகிறேன்: பிரதமர் முன்னிலையில் மன்னிப்பு கோரினார் சனுசி
May 5, 2024, 10:47 am
கெடாவில் கடும் ஏழைகளின் எண்ணிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க 2 மாதம் அவகாசம்: பிரதமர்
May 5, 2024, 10:32 am
பெட்ரோல், டீசல் விலை உயரும் எனும் அந்நிய நாட்டு ஊடகத்தின் செய்தி தவறானது: ஃபஹ்மி
May 4, 2024, 6:19 pm