நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சட்டமன்ற உறுப்பினர் அரபாத்தின் தந்தை காலமானார்: பிரதமர் நேரில் சென்று ஆறுதல் 

தம்பூன்:

தம்புன் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள உலுகிண்டா சட்டமன்ற உறுப்பினரும் தம்புன் தொகுதி பி்கேஆர் கட்சியின் தலைவருமான  முஹம்மத் அரபாத்தின் தந்தை முஹம்மது ஃபாரூக் முஹம்மது இப்ராம்பு (வயது 76) காலமானார்.

அவரின் மறைவை அறிந்த பிரதமரும் , தம்புன் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முஹம்மத் அரபாத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். முன்னதாக பிரதமர் தொலைபேசி வாயிலாக இரங்கல் தெரிவித்தார். 

மேலும் தஞ்சோங் ரம்புத்தானில் உள்ள  தாமான் சோங் கிவி எனும் இடத்தில் உள்ள முஹம்மத் அரபாத் இல்லத்திற்கு வருகை புரிந்து அராப்பாட் குடும்பத்திற்கு அனுதாபத்தை தெரிவித்துக்கொண்டார்.

முஹம்மத் பாரூக் முஹம்மத் இப்ராம்பு முதுமை காரணமாக காலமானார்.  

May be an image of 6 people, dais and text

அவருக்கு பேரா மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ சராணி முஹம்மத், முதல் நாள்  இல்லத்திற்கு நேரடியாக வருகை அளித்து  இரங்கலைத்   தெரிவித்துக்கொண்டார்.

மேலும் மத்திய அமைச்சர்கள்,  மாநில அமைச்சர்கள், மாநில சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்,  மாநில அரசாங்க தலைமைச் செயலாளர்,  மாவட்ட ஆட்சியாளர் , மாநில போலீஸ் படைத் தலைவர், அரசு அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் உட்பட சுமார் 2 ஆயிரத்திற்கும் மேல் இல்லத்திற்கு வருகை அளித்து குடும்ப உறவினர்களான மஹரிப பீவீ, ராயல் ஷேக் , மைதீன், இப்ராஹிம், ஆபிதா பானு  ஆகியோருக்கும் அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டனர்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset