நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேராக் ஆட்சியாளர் சுல்தான் நஸ்ரின் ஷா துணை பேரரசராக மூன்றாவது முறையாக பதவி உறுதிமொழி 

கோலாலம்பூர்: 

பேராக் மாநில ஆட்சியாளர் சுல்தான் நஸ்ரின் ஷா துணை பேரரசராக மூன்றாவது முறையாக பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார். 

கடந்த 2016ஆம் ஆண்டு முதல் சுல்தான் நஸ்ரின் ஷா துனை பேரரசராக அவர் பொறுப்பு வகித்து வருகிறார். 

263ஆவது மலாய் ஆட்சியாளர்கள் மன்றத்தின் கூட்டத்தில் 17ஆவது மாமன்னராக சுல்தான் இப்ராஹிம் அல்மஹ்ரும் சுல்தான் இஸ்கண்டார் தேர்வு செய்யப்பட்ட வேளையில் துணை பேரரசராக சுல்தான் நஸ்ரின் ஷா ஐந்தாண்டுகளுக்கு அப்பொறுப்பில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டது. 

சுல்தான் இப்ராஹிமும் சுல்தான் நஸ்ரினும் பதவி உறுதிமொழிகளை எடுத்ததுடன் பதவி பிரமாண பத்திரத்தில் கையெழுத்திட்டனர். 

சுல்தான் நஸ்ரின் ஷாவின் செழுமையான நிர்வாக தன்மை காரணமாக அவருக்கு மீண்டும் துணை பேரரசராகும் வாய்ப்பு கிட்டியது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset