நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜீப்பின் அரச மன்னிப்பு: மாமன்னரின் அதிகாரத்திற்கு உட்பட்டது

கோலாலம்பூர்:

நஜீப்பிற்கு அரச மன்னிப்பு வழங்குவது குறித்து முடிவெடுக்கும் அனைத்து அதிகாரமும் மாமன்னருக்கு மட்டும்தான் உள்ளது.

அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்கத் துறை அமைச்சர் சாங் லீ காங் தெரிவித்தார்.

எஸ்ஆர்சி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பிரதமர் நஜீப் அரசு மன்னிப்பு கோரியுள்ளார்.

அவருக்கு மன்னிப்பு வழங்குவதா இல்லையா என்பதை குறித்து அரச மன்னிப்பு வாரியம் முடிவெடுக்கும்.

குறிப்பாக இது மாமன்னரின் அதிகாரத்திற்கு உட்பட்டதாகும்.

ஆகவே இந்த விவகாரம் குறித்து அமைச்சரவையில் பேசுவதற்கான எந்த ஒரு அவசியமும் இல்லை.

அதேவேளையில் அமைச்சர்களும் இதைப் பற்றி பேசுவதற்கு அதிகாரமும் இல்லை.

அதே வேளையில் அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டதா இல்லையா என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset