நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

16 வயது மாணவியிடம் பாலியல் பலாத்காரம் : காவல்துறை அதிகாரி கைது 

பெட்டாலிங் ஜெயா: 

16 வயது மாணவியைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி நேற்று விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மத்திய பேராக் மாவட்டத்தில் பணியிலிருந்த 42 வயது சந்தேக நபர், தண்டனைச் சட்டத்தின் 376-ஆவது பிரிவின் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக ஜனவரி 31 வரை நான்கு நாட்கள் காவலில் வைக்கப்படுவதாக பேராக் காவல்துறைத் தலைவர் முஹமத் யூஸ்ரி ஹசான் பஸ்ரி தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிக்கு எதிரான விசாரணை வெளிப்படையாகவும், விரிவாகவும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

சந்தேக நபர் காவல்துறை அதிகாரியாக இருந்தாலும் அவருக்கு எதிரான விசாரணை நேர்மையான முறையில் நடத்தப்படும் என்றாரவர். .

மேலும், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (கேபிஜே) பிரிவு 112 இன் படி, வாக்குமூலங்களைப் பதிவு செய்ய, பாதிக்கப்பட்டவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை மத்திய பேராக் பேராக் மாவட்டக் காவல்துறை தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, 16 வயதுடைய மாணவி காரில் இருமுறை காவல்துறை அதிகாரியால் கற்பழிக்கப்பட்டதாகக் கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset