நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அதிகமான எம்பிகள் பிரதமருக்கு ஆதரவா?: பெர்சத்து மறுப்பு

கோலாலம்பூர்:

எதிர்க்கட்சிகள் விரைவில் அரசாங்கத்தை மாற்ற முடியும் என்பதை அன்வாரின் ஆதரவாளர்கள் நிரூபிக்க வேண்டும்.

அப்படி நிரூபிக்க தவறினால் தம் கட்சியைச் சேர்ந்த அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை  ஆதரிக்கிறார்கள் என்ற கூற்று பொய்யானது என்று பெர்சாத்து இளைஞர் பிரிவுத் தலைவர் வான் அஹ்மத் பைசால் கூறி நிராகரித்துள்ளார்.

பெர்சத்துவைச் சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலை மேலும் தொடரும். குறிப்பாக ஆட்சியை கவிழ்க்க முடியும் என்பதை நிருபிக்க வேண்டும்.

இல்லையென்றால் இன்னும் அதிகமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை ஆதரிப்பார்கள் என்ற செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த செய்தியில் எந்தவொரு உண்மையும் இல்லை.

பெர்சாத்து, தேசியக் கூட்டணியைச் சேர்ந்த  பல நாடாளுமன்ற உறுப்பினர்களை நான் சந்தித்தேன். 

இதுபோன்ற நிலைமையும் கேள்வியும் ஒருபோதும் எழவில்லை என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset