செய்திகள் மலேசியா
ஓய்வூதிய திட்டம் ரத்து; முறையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்: டத்தோ சராணி முஹம்மத்
ஈப்போ:
பொதுச்சேவை ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்படும் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து தாம் கருத்து கூற விரும்பவில்லை என்று பேராக் மாநில மந்திரி பெசார் டத்தோ சராணி முஹம்மத் கூறினார்.
அண்மைய காலமான நாட்டில் பேசுப்பொருளாக இந்த ஓய்வூதிய திட்டம் மாறியுள்ளதை தாம் அறிவதாக கோத்தா தம்பான் சட்டமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக மாநில அரசாங்கம் எந்தவொரு நிலைப்பாட்டினையும் எடுக்கவில்லை. தாம் முறையாக ஆராய்ந்த பிறகே அது தொடர்பாக கருத்து தெரிவிப்பேன் என்று செய்தியாளர்களிடம் டத்தோ சராணி முஹம்மத் குறிப்பிட்டார்.
பேராக் மாநிலத்தில் அரசு துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டம் தற்போதைக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், அவர்களுக்கு முறையான நிரந்தர பணியமர்த்தும் நடவடிக்கைகள் உள்ளதாக அவர் சொன்னார்.
முன்னதாக, பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பொதுச்சேவை துறையில் புதிதாக நியமிக்கப்படும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் இல்லை என்று அரசாங்கம் அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2024, 12:37 pm
அரசு ஊழியர்களின் சம்பளம் 13 சதவீதத்திற்கும் கூடுதலாக உயர்த்தப்படும்: பிரதமர்
May 1, 2024, 12:35 pm
கவலைப்பட ஒன்றும் இல்லை: பெர்லிஸ் மந்திரி புசார்
May 1, 2024, 12:33 pm
வலைப்பதிவு எழுத்தாளர் வான் அஸ்ரிக்கு 2 நாள் தடுப்புக் காவல்: வழக்கறிஞர்
May 1, 2024, 12:32 pm
போலி வேலை வாய்ப்பு, இல்லாத முதலீடுகளில் ஈடுபட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர்
May 1, 2024, 12:07 pm
தொழிலாளர்களின் பங்கை அரசாங்கம் அங்கீகரிக்கிறது: பிரதமர் அன்வார்
May 1, 2024, 12:00 pm
பிள்ளைகளுக்கான கல்வியைத் தேர்வு செய்வது பெற்றோரின் உரிமை: நிக் நஸ்மி
May 1, 2024, 12:10 am