செய்திகள் மலேசியா
பத்துமலையின் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு மத்திய அரசு உதவும்: கோபிந்த் சிங்
பத்துமலை:
பத்துமலையில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு மத்திய அரசு நிச்சயம் உதவும்.
பத்துமலையில் உரையாற்றிய இலக்கவியல் அமைச்சர் கோபிந்த சிங் இதனை அறிவித்தார்.
நாடு தழுவியல் நிலையில் தைப்பூச விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
குறிப்பாக லட்சக்கணக்கான மக்கள் பத்துமலை கூடி தைப்பூச விழாவை கொண்டாடி வருகின்றனர்.
இவ்வேளையில் அனைத்து இந்து மக்களுக்கு தைப்பூச விழா வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் நாட்டில் வாழும் இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தலைமையிலான அரசு பல திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.
இத்திட்டங்கள் அனைத்தும் நிச்சயம் இந்திய சமுதாயத்திற்கு பெரும் பயனாக இருக்கும்.
மேலும் பத்துமலையில் மேற்கொள்ளப்படவிருக்கும் திட்டங்கள் உட்பட பல கோரிக்கைகளை தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ நடராஜா முன்வைத்தார்.
இந்த கோரிக்கைகளை பிரதமர் பார்வைக்கு கொண்டு செல்வேன். குறிப்பாக இந்த விவகாரம் குறித்து ஏற்கெனவே பிரதமரிடம் கூறியுள்ளேன்.
இத்திட்டங்களுக்கு அரசு முழு ஆதரவு தரும் என பிரதமர் கூறினார்.
ஆகவே தேவஸ்தானத்தின் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் கோபிந்த் சிங் கூறினார்.
- பார்த்தின் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 11:26 am
தகாத முறையில் பேசியதற்காக வருந்துகிறேன்: பிரதமர் முன்னிலையில் மன்னிப்பு கோரினார் சனுசி
May 5, 2024, 10:47 am
கெடாவில் கடும் ஏழைகளின் எண்ணிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க 2 மாதம் அவகாசம்: பிரதமர்
May 5, 2024, 10:32 am
பெட்ரோல், டீசல் விலை உயரும் எனும் அந்நிய நாட்டு ஊடகத்தின் செய்தி தவறானது: ஃபஹ்மி
May 4, 2024, 6:19 pm
நாட்டில் அனைத்து சமூகத்தினரின் உரிமைகளும் காக்கப்படும்: பிரதமர் அன்வார்
May 4, 2024, 3:45 pm
நஜீப் விவகாரத்தில் அம்னோ, தேமு ஊமையாக இருக்கக் கூடாது: டத்தோஶ்ரீ தனேந்திரன்
May 4, 2024, 3:43 pm
கோல குபு பாருவில் பிரதமரை விமர்சித்ததாக கூறப்படும் தகவலை டத்தோஶ்ரீ சரவணன் மறுத்தார்
May 4, 2024, 3:41 pm