நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெர்சத்து கட்சியின் ஆறாவது நாடாளுமன்ற உறுப்பினர் பிரதமர் அன்வாருக்கு ஆதரவு

கிள்ளான்:

தஞ்சோங் காராங் பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜூல்கபெரி ஹனாபி பிரதமரை ஆதரிப்பதாக அறிவித்துள்ளார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரை ஆதரிக்கும் 6ஆவது பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர் இவராவார்.

அடுத்த பொதுத் தேர்தல் வரை பிரதமரையும் அவரின் மடானி அரசையும் தாம் ஆதரிக்க போவதாக அவர் கூறினார்.

அதே வேளையில் தொடர்ந்து பெர்சத்து கட்சியின் உறுப்பினராக இருப்பேன்.

குறிப்பாக பெர்சத்து கட்சிக்கு தொடர்ந்து விசுவாசமாக இருப்பேன்.

பிரதமருக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக எந்தவொரு அழுத்தமும் எனக்கு தரப்படவில்லை.

தஞ்சோங் காராங் மக்களின் நலனை கருத்தில் கொண்டே இந்த முடிவை தாம் எடுத்ததாக அவர் கூறினார்.

- பார்த்தின் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset