நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்துமலையில் தைப்பூச உற்சவம்: பக்தி பரவசத்தில் பன்னாட்டு பக்தர்கள்

பத்துமலை:

பத்துமலையில் தைப்பூச உற்சவம் இன்று உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

பல நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தங்களின் நேர்த்திக் கடனை பூர்த்தி செய்து வருகின்றனர்.

நாடு முழுவதும் தைப்பூச விழா இன்று மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

உலகப் பிரசித்திபெற்ற பத்துமலையில் இந்த விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும்.

அவ்வகையில் நேற்று சேவற்கொடி ஏற்றப்பட்டது முதல் விடிய விடிய பக்தர்கள் தங்களின் நேர்த்திக் கடனை பூர்த்தி செய்து வருகின்றனர்.

வண்ண மயில் காவடி, பால் குடம் ஆகியவற்றை ஏந்தி பக்தர்கள் நேர்த்திக் கடனை பூர்த்தி செய்து வருகின்றனர்.

இதனால் பத்துமலை பக்தி பரவசத்தில் மூழ்கியுள்ளது.

- பார்த்தின் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset