நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆலயம் உட்பட வழிபாட்டு தலங்களுக்கு தண்ணீர் கட்டண உயர்வு இல்லை: மந்திரி புசார் அறிவிப்பு 

பத்துமலை:

ஆலயம் உட்பட வழிப்பாட்டு தலங்களுக்கு தண்ணீர் கட்டண உயர்வு இல்லை என்று சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் சாரி  அறிவித்தார்.

மக்களுக்கு சிறப்பான சேவையை வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் தீபகற்ப மலேசியா, லாபுவானின் தண்ணீர் கட்டணம் உயர்கிறது.

வரும் பிப்ரவரி 1ஆம் தேதி இந்த புதிய தண்ணீர் கட்டணம் அமலுக்கு வருகிறது.

இதில் அனைத்து மாநிலங்களிலும் மிகவும் குறைந்த அளவில் தண்ணீர் கட்டணத்தை சிலாங்கூர் மாநிலம் தான் உயர்த்தவுள்ளது.

அதே வேளையில் தண்ணீர் சேவைக்கான உதவித் தொகைகளும் தொடரும்.

இதனால் தண்ணீர் கட்டண உயர்வு சிலாங்கூர் மாநில மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தாது.

மேலும் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள வழிபாட்டு தலங்களில் தண்ணீர் கட்டணம் உயராது.

இதில் ஆலயங்களும் அடங்கும் என்று பத்துமலைக்கு சிறப்பு வருகை மேற்கொண்ட மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் கூறினார்.

- பார்த்தின் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset