செய்திகள் மலேசியா
4 வாகனங்களை மோதி தள்ளிய லோரி: தாயும் பிள்ளையும் மரணம்
ஷாஆலம்:
கட்டுப்பாட்டை இழந்த லோரி ஒன்று 4 வாகனங்களை மோதி தள்ளியது. இந்த சம்பவத்தில் தாயும் பிள்ளையும் மரணமடைந்தனர் என்று சிலாங்கூர் தீயணைப்பு படையில் துணை இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் மொக்தார் கூறினார்.
ஜாலான் பந்திங் - டெங்கிலில் இருந்து கோல லங்காட் சுங்கை மங்கீஸ்க்கு செல்லும் சாலையில் காலை 7 மணிக்கு இந்த சம்பவம் நிகழ்ந்தது.
தகவல் கிடைத்ததும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
மண் லோரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து நான்கு வாகனங்களை மோதி தள்ளியது.
வாகங்களில் சிக்கியிருந்தவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
அதே வேளையில் 40 வயதான தாயும் அவரின் பிள்ளையும் கடுமையான காயங்களுக்கு இலக்காகி மரணமடைந்தனர்.
காயமடைந்த மற்றவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டனர் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2024, 6:11 pm
பாங்கின் கல்வித் தேர்ச்சி குறித்து கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சியின் நோக்கம் என்ன?: தியோ நீ சிங்
April 29, 2024, 6:09 pm
உலுசிலாங்கூரின் 5 தோட்டப் பிரச்சினையை மாநில அரசு கைவிடவில்லை: பாப்பாராயுடு
April 29, 2024, 6:08 pm
மக்கள் பிரச்சினைகளில் மலேசிய மக்கள் சக்தி கட்சி கவனம் செலுத்தும்: டத்தோஶ்ரீ தனேந்திரன்
April 29, 2024, 6:07 pm
நெகிரி செம்பிலான் மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆதி. குமணன் நினைவு விழா 2024
April 29, 2024, 5:39 pm
ஓப்ஸ் பகார் லாவுட் சோதனை நடவடிக்கை: 178 கைது, 15 மில்லியன் வெள்ளி பறிமுதல்: சைஃபுடின்
April 29, 2024, 5:24 pm
உலக வங்கியின் அறிக்கை குறித்து விளக்கமளிப்பதை கல்வியமைச்சர் தவிர்த்துள்ளார்
April 29, 2024, 5:23 pm
போதைப்பொருள் கடத்தல் கும்பலில் ஈடுபட்ட காதலர் ஜோடி கைது
April 29, 2024, 5:20 pm
கால்நடைகள் கடத்தப்படும் நடவடிக்கைகள் முறியடிக்கப்படும்: மாட் சாபு
April 29, 2024, 3:21 pm