நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

4 வாகனங்களை மோதி தள்ளிய லோரி: தாயும் பிள்ளையும் மரணம்

ஷாஆலம்:

கட்டுப்பாட்டை இழந்த லோரி ஒன்று 4 வாகனங்களை மோதி தள்ளியது. இந்த சம்பவத்தில் தாயும் பிள்ளையும் மரணமடைந்தனர் என்று சிலாங்கூர் தீயணைப்பு படையில் துணை இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் மொக்தார் கூறினார்.

ஜாலான் பந்திங் - டெங்கிலில் இருந்து கோல லங்காட் சுங்கை மங்கீஸ்க்கு செல்லும் சாலையில் காலை 7 மணிக்கு இந்த சம்பவம் நிகழ்ந்தது.

தகவல் கிடைத்ததும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

மண் லோரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து நான்கு வாகனங்களை மோதி தள்ளியது.

வாகங்களில் சிக்கியிருந்தவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

அதே வேளையில் 40 வயதான தாயும் அவரின் பிள்ளையும் கடுமையான காயங்களுக்கு இலக்காகி மரணமடைந்தனர்.

காயமடைந்த மற்றவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டனர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset