நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மேலவைத் தலைவருக்கான பதவி காலியாக உள்ளது: பிரதமர்

கோலாலம்பூர்:

மேலவைத் தலைவருக்கான பதவி காலியாக உள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதிப்படுத்தினார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மேலவைத் தலைவர் பொறுப்பில் இருந்து வான் ஜுனய்டி விலகினார். இதனைத் தொடர்ந்து அப்பதவி காலியாகி உள்ளது.

இப் பதவிக்கு அடுத்து சரவா மாநில ஆளுநர் டான்ஸ்ரீ தாயிப் முஹம்மத் நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

இருந்தாலும் ஒற்றுமை அரசாங்கத்தின் செயற் குழு இன்று கூடுகிறது. இந்த செயற் குழுக் கூட்டத்தில் புதிய மேலவைத் தலைவர் யார் என்பது குறித்து விவாதிக்கப்படும்.

அதன் பின் புதிய மேலவைத் தலைவர் தேர்வு செய்யப்படும்.

ஓரிரு நாட்களில் அதற்கான அறிவிப்புகள் வரும் என்று மலாயா பல்கலைக்கழகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset