நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காலியாக இருந்து வீட்டை ஆக்கிரமித்த  அந்நிய நாட்டினர்: ஆடவர் அதிர்ச்சி

கோலாலம்பூர்:

காலியாக இருந்த தனது நண்பரின் வீட்டை அந்நிய நாட்டினர் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர். இந்த சம்பவம் தமக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக ஆடவர் ஒருவர் சமூக வலைத் தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

பூச்சோங்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் எனது நண்பருக்கு சொந்தமான வீடு உள்ளது.

அவர் தற்போது கிழக்கு கரையில் தங்கியுள்ளார். இதனால் இந்த வீட்டை விற்று தருமாறு கூறி வீட்டு சாவியை என்னிடம் கொடுத்தார்.

சிரம்பான் 2ல் வசிக்கும் நான் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்றேன்.

அப்போது வீட்டில் அந்நிய நாட்டினர் தங்கியிருந்தது எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் குறித்து என் நண்பரிடம் தெரிவித்தேன். அவரும் அதிர்ச்சியடைந்தார்.

கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் காலியாக இருந்த அவ் வீட்டை தற்போது அந்நிய நாட்டினர் ஆக்கிரமித்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட அந்நிய நாட்டினருக்கு மலாய், ஆங்கிலம் ஏதும் தெரியவில்லை. 

சம்பந்தப்பட்டவர்கள் அத்துமீறி வீட்டில் நுழைந்துள்ளனர். அண்டை வீட்டில் இருந்து தண்ணீர் வசதியை பெற்றுக் கொள்கின்றனர்.

மின்சாரம் எப்படி கிடைக்கிறது என்று எனக்கு தெரியவில்லை.

காலியாக இருக்கும் வீடுகளை மக்கள் அடிக்கடி சென்று பாருங்கள். இல்லையென்றால் அவ்வீடுகளும் ஆக்கிரமிக்கப்படும் என்று அவ்வாடவர் முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset