நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசு ஊழியர்கள் பிப்ரவரி 15-ஆம் தேதிக்குள் பாடு தளத்தில் தகவலைப் புதுப்பிக்க வலியுறுத்து   

புத்ராஜெயா:

அனைத்து அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களது தகவல்களை பாடு தரவு தளத்தில் பிப்ரவரி 15-ஆம் தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும் என்று பொது சேவை துறையின் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ வான் அஹமத் தஹ்லான் அப்துல் அஜிஸ் தெரிவித்துள்ளார். 

அனைத்து அமைச்சகங்களின் தலைமைச் செயலாளர்கள், அனைத்து மத்திய துறைத் தலைவர்கள், மாநில அரசு செயலாளர்கள், மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி மட்டங்களிலுள்ள சட்டப்பூர்வ அமைப்புகளின் தலைவர்களுக்கு இது குறித்த அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 

https://padu.gov.my என்ற இணைப்பின் மூலம் பாடு தரவு தளத்தில் தகவல்களைப் புதுப்பிப்பதை உறுதிசெய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். 

சம்பந்தப்பட்ட பதிவு செயல்முறையின் சீரான தன்மையைக் கண்காணித்து உறுதிசெய்யும் பொறுப்பு பொருளாதார அமைச்சகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

பாடு முதன்மை தரவு தளத்தைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஜனவரி 2-ஆம் தேதி தொடக்கி வைத்தார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset