நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய இந்தியர் அச்சக உரிமையாளர் சங்கக் கட்டட நிதிக்கு அமைச்சர் கோபிந்த் சிங் மானியம் வழங்கினார்

கோலாலம்பூர்:

மலேசிய இந்தியர் அச்சக உரிமையாளர் சங்கத்தின் கட்டட நிதிக்கு டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ 30,000 ரிங்கிட் மானியம் வழங்குவதாக அறிவித்தார்.

மலேசிய இந்தியர் அச்சக உரிமையாளர் சங்கத்தின் 11ஆம் ஆண்டு விழா மற்றும் பொங்கல் விழாவை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றிய போது பலத்த கைத்தட்டலுக்கு இடையே அவர் இந்த அறிவிப்பை செய்தார்.

சோலை பாஸ்கரன் தலைமையில் மலேசிய அச்சக உரிமையாளர் சங்கம் சொந்த கட்டத்தை வாங்கும் முயற்சியை நான் பெரிதும் பாராட்டுகிறேன்.

இந்த முயற்சிக்கு எனது பங்களிப்பாக 30,000 ரிங்கிட்டை வழங்குவதாக அவர் அறிவித்தார்.

டாமான்சாரா நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு சுரேஸ் சிங், டத்தோ சகாதேவன், டத்தோஸ்ரீ தேவமணி, ரத்னவள்ளி அம்மையார், வழக்கறிஞர் மனோகரன், டத்தோ ஜெனா உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset