நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பதவி இருக்கிறதோ இல்லையோ மஇகா வலுவாக இருக்க வேண்டும்: டத்தோ நெல்சன்

சிரம்பான்:

பதவி இருக்கிறதோ இல்லையோ மஇகா வலுவாக இருக்க வேண்டும்.

இதுவே கட்சி தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் இலக்கு என்று கல்விக் குழுத் தலைவர் டத்தோ நெல்சன் கூறினார்.

மஇகா சிரம்பான் தொகுதியின் ஏற்பாட்டில் தலைவருடன் பொன்மாலை பொழுது எனும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

தேசியத் தலைவரின் சார்பில் கலந்து கொண்டு பேசிய டத்தோ நெல்சன்,

ஆளும் கட்சியாக இருந்த மஇகா தற்போது ஆதரவுக் கட்சியாக இருந்து வருகிறது.

அக்கட்சிக்கு உரிய பதவிகள் வழங்கப்படவில்லை. இதை பற்றி தேசியத் தலைவர் சற்றும் களங்வில்லை.

பதவி இருக்கிறதோ இல்லையோ கட்சி பொருளாதார ரீதியில் வலுவாக இருக்க வேண்டும்.

இதன் அடிப்படையில் தான் புதிய தலைமையகம், கல்லூரி என பல திட்டங்களை அவர் மேற்கொண்டு வருகிறார்.

இத்திட்டங்கள் அனைத்தும் முழுமைப் பெற்றால் கட்சிக்கு மட்டும் அல்ல ஒட்டுமொத்த இந்திய சமுயதாயத்திற்கு அது பயனாக இருக்கும்.

குறிப்பாக எந்த கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அது பயனை தரும்.

ஆகவே இந்த திட்டங்கள் வெற்றி பெற கட்சியினர் தவிர்த்து இந்திய சமூகமும் ஆதரவு தர வேண்டும் என்று டத்தோ நெல்சன் கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset