நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மின்னல் பண்பலையின் தைப்பூசத் தண்ணீர் பந்தல் 

செலாயாங்: 

ஜனவரி 25-ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தைப்பூசப் பெருவிழாவை முன்னிட்டு மின்னல் பண்பலை அதன் தண்ணீர் பந்தல் கூடாரத்தைப் பத்துமலை கோயில் வளாகத்தின் வலதுபுறத்தில்  அமைத்துள்ளது. 

பத்துமலைக்கு வருகை தரும் சுமார் ஆயிரம் பேருக்கு உணவு, தண்ணீர் போட்டல்கள் வழங்க மின்னல் பண்பலை ஏற்பாடு செய்துள்ளது.

மின்னல் பண்பலையின் தண்ணீர் பந்தலில்  மின்னல் பண்பலையின் அறிவிப்பாளர்கள் யாவரும் பத்துமலைக்கு வரும் பக்த பெருமக்களுக்கு உணவு, பானங்களை வழங்கி அவர்களின் பசியைப் போக்கினர். 

மின்னல் பண்பலையின் தைப்பூசத் திருவிழாவில் மின்னல் அறிவிப்பாளர்கள் தெய்வீகன், மோகன், குணசுந்தரி, பிரேமா கிருஷ்ணா, காயத்ரி, ரவீன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு முதன்முறைதாக மின்னல் பண்பலை இந்தத் தைப்பூசத் தண்ணீர் பந்தல் நிகழ்வை முன்னெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- மவித்ரன் கிருஷ்ணன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset