நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

9 கேடிஎம் நிலையங்கள் மேம்படுத்தப்படும்; சிரம்பானில் புதிய நிலையம் கட்டப்படும்: அந்தோனி லோக்

கோலாலம்பூர்:

கிள்ளான் பள்ளத்தாக்கில் 9 நிலையங்களை கேடிஎம்பி மேம்படுத்தவுள்ளது.

அதே வேளையில் சிரம்பானில் புதிய நிலையம் ஒன்றும் கட்டப்படவுள்ளது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் அந்தோனி லோக் கூறினார்.

கிள்ளான் பள்ளதாக்கு இரண்டை தண்டவாள திட்டம் 2ன் கீழ் இம்மேம்பாட்டு திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது.

சாலாக் செலாத்தான், பாங்கி, பந்தாய் டாலாம், ஸ்ரீ செத்தியா, பத்து தீகா, பாடாங் ஜாவா, கிள்ளான்,  ஜாலான் கஸ்தாம், கிள்ளான் துறைமுகம் ஆகிய நிலையங்கள் மேம்படுத்தப்படவுள்ளது.

அதே வேளையில் சிரம்பான் சென்ட்ரல் கேடிஎம் என்ற பெயரில் புதிய நிலையம் கட்டப்படும்.

இப்புதிய ரயில் நிலையம் அடுத்த 24 மாதங்களில் தயாராகும்.

இத்திட்டங்களுக்காக 280 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அந்தோனி லோக் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset