செய்திகள் மலேசியா
கேடிஎம் நடைப்பாலத்தில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இரு அந்நிய நாட்டினர் கைது
செர்டாங்:
கேடிஎம் நடைப்பாலத்தில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இரு அந்நிய நாட்டினரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதனை செர்டாங் போலீஸ் தலைவர் ஏஏ அன்பழகன் உறுதிப்படுத்தினார்.
கடந்த ஜனவரி 14ஆம் தேதி அதிகாலை 12.40 மணியளவில் சம்பந்தப்பட்ட 29 வயது உள்ளூர் பெண் அந்த கேடிஎம் நடைப்பாலத்தில் நடந்து சென்றுள்ளார்.
அப்போது அடையாளம் தெரியாத ஆடவர் ஒருவர் அப் பெண்ணை வழி மறித்துள்ளார்.
அப்பெண்ணிடம் இருந்த கைத்தொலைபேசியை பறித்துக் கொண்ட அவ்வாடவர் கத்தி முனையில் அப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட அப்பெண் அதிகாலை 3 மணிக்கு போலீஸ் புகார் செய்தார்.
இப்புகாரின் அடிப்படையில் அந்நிய நாட்டு ஆடவரை போலீசார் கைது செய்தனர். தாம் செய்த குற்றத்தை அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
மேலும் அவ்விடத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த மற்றொரு ஆடவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் இருவரும் கூட்டாக வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட இருவரும் 7 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அன்பழகன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 3:45 pm
நஜீப் விவகாரத்தில் அம்னோ, தேமு ஊமையாக இருக்கக் கூடாது: டத்தோஶ்ரீ தனேந்திரன்
May 4, 2024, 3:43 pm
கோல குபு பாருவில் பிரதமரை விமர்சித்ததாக கூறப்படும் தகவலை டத்தோஶ்ரீ சரவணன் மறுத்தார்
May 4, 2024, 3:41 pm
மலேசியாவில் தமிழர்களின் வரலாறு பாதுக்காக்கப்பட வேண்டும்: சென்னை நீதிபதி கிருஷ்ணன்
May 4, 2024, 3:39 pm
வீட்டின் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்: பாசிர் மாஸில் பரபரப்பு
May 4, 2024, 3:02 pm
வாக்கு செலுத்த வேண்டாம் என்பதை வலியுறுத்துவர்கள் சுயநலவாதிகள்: ஓம்ஸ் பா.தியாகராஜன்
May 4, 2024, 1:56 pm
அரசு ஊழியர்களின் சம்பள உயர்வை அமல்படுத்தலாம்: பிரதமர்
May 4, 2024, 1:51 pm