செய்திகள் மலேசியா
புகார்களை ஏற்க மறுப்பது குற்றமாகும் : அலாவுதீன் அப்துல் மஜித்
கோலாலம்பூர் :
புகார் அறிக்கையை ஏற்காதது தவறான நடவடிக்கையாகும் என்று கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ அலாவுதீன் அப்துல் மஜித் தெரிவித்துள்ளார்.
ஒரு காவல் நிலையத்தில் ஆடவர் ஒருவர் தம்மிடம் மிரட்டிப் பணம் பறித்த நான்கு காவல்துறை அதிகாரிகள் மீது கொடுத்த புகாரை ஏற்க மறுத்த காவல்துறை அதிகாரியின் செயல் தவறானது என்றும் அவர் கூறினார்.
கடந்த ஜனவரி 4-ஆம் தேதி 10,000 ரிங்கிட் பணத்தை மிரட்டி பணம் பறித்த நான்கு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
புகார் கொடுக்க மக்கள் காவல் நிலையத்திற்கு வந்தால், அங்குப் பணியில் இருக்கும் காவல்துறை அதிகாரிகள் அப்புகாரை ஏற்க வேண்டும். பின்னர் அந்த வழக்கு ஒரு குறிப்பிட்ட அதிகாரியால் கையாளப்படும் என்றார் அவர்.
இந்த வழக்கில், அறிக்கையை எடுக்க மறுத்த காவல்துறை அதிகாரியைத் தமது தரப்பு அடையாளம் கண்டுள்ளதாகவும் இது குறித்து விசாரிக்கப்படும் என்றார்.
இது போன்ற விஷயங்களைத் தங்கள் தரப்பு இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
கோலாலம்பூர் காவல் படைத் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற மாதாந்திர கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர் சந்திப்பின் போது இவ்வாறு கூறினார்.
மேலும் நடவடிக்கை எடுப்பதற்கு முன், காவல்துறையின் அறிக்கை சட்ட விதிகளின்படி வகைப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
ஜனவரி 4-ஆம் தேதி இங்குள்ள கெப்போங் கொம்ப்ளெக்ஸ் பாங்சாபுரிக்கு முன் நான்கு காவல்துறை அதிகாரி மிரட்டி பணம் பறித்த வழக்கு பற்றிய புகாரைப் பெற்றதாகக் காவல்துறை உறுதிப்படுத்தியது.
டிசம்பர் 23-ஆம் தேதி கெப்போங் அடுக்குமாடி வளாகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் நான்கு காவல்துறை அதிகாரிகள் RM10,000 கேட்டதாக உள்ளூர் நபர் ஒருவர் குற்றம் சாட்டினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 28, 2024, 3:00 pm
கோல குபு பாருவில் பொய் பிரச்சாரங்களை இந்திய சமூகம் நம்பக் கூடாது: டத்தோ ரமணன்
April 28, 2024, 2:57 pm
டத்தோ ரமணனின் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் 5,000 பேர் கலந்து கொண்டனர்
April 28, 2024, 2:53 pm
இந்திய அரசின் உயர் கல்வி வாய்ப்புகளை இழந்தால் மீண்டும் கிடைக்காது: சுரேந்திரன் கந்தா
April 28, 2024, 1:59 pm
முதியவரைத் தாக்கிய விவகாரம்; சமூக நல இல்லத்தின் நிர்வாகிக்கு 4,500 ரிங்கிட் அபராதம்
April 28, 2024, 12:40 pm
இந்தியாவில் கல்வி பயிலும் மலேசிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்: தூதரக அதிகாரி சுஷ்மா
April 28, 2024, 11:34 am
ஆம்புலன்ஸ் 6 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்தது: இருவர் காயம்
April 28, 2024, 11:23 am
சிலாங்கூர் மாநிலத்தின் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு விதி மீறல் அல்ல: மந்திரி புசார் விளக்கம்
April 28, 2024, 11:08 am
எதிர்க்கட்சி கூட்டணிக்கான வாக்குகள் பெரிய மாற்றத்தைக் கொண்டு வராது: டத்தோ ரமணன்
April 28, 2024, 10:47 am
ஜொகூர் ஃபோரெஸ் சிட்டியில் சூதாட்ட மையமா ? கருத்து பதிவிட்ட செகுபாட் கைது
April 28, 2024, 10:42 am