நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரோஸ்மாவுக்கு உடல் நலக் குறைவு: வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

கோலாலம்பூர்:

முன்னாள் பிரதமர் நஜீப்பின் மனைவி ரோஸ்மாவுக்கு  உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது என்று கூறி அவர் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

டத்தோஸ்ரீ நஜீப்பின் மனைவி ரோஸ்மா மன்சூர் மீது பண மோசடி, வரி ஏய்ப்பு  உப்டட 17 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்த குற்றச்சாட்டு வழக்கை தள்ளுபடி செய்ய ரோஸ்மா தொடர்ந்து முயற்சித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை உயர்நீதிமன்றம் இன்று ஒத்திவைத்தது.

ரோஸ்மாவின் உடல் நலக் குறைவால் இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. 

மேலும் இந்த வழக்கு நிர்வாகம் வரும் மார்ச் 1ஆம் தேதி நடைபெறும் என்று நீதிபதி கே. முனியாண்டி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset