செய்திகள் மலேசியா
மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததுடன் கொள்ளையடித்த இரு போலீஸ் அதிகாரிகள் கைது
கோலாலம்பூர்:
உஸ்பெகிஸ்தான் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததுடன் கொள்ளையடித்ததாக நம்பப்படும் இரு போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.
இதனை சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமார் கான் உறுதிப்படுத்தினார்.
அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ்படையைச் சேர்ந்த அவ்விரு அதிகாரிகளும் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.
அப்போது கார் ஒன்றை நிறுத்தி சோதனைகளை மேற்கொண்டனர். அக்காரில் 18 வயது உள்ளூரைச் சேர்ந்த ஆணும் 17 வயதுடைய உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த பெண்ணும் இருந்துள்ளனர்.
உங்களை கைது செய்தால் 2 ஆயிரம் ரிங்கிட் செலுத்த வேண்டும். அப்படி இல்லை என்றால் இப்போதே 500 ரிங்கிட்டை செலுத்துங்கள் என அவர்கள் விரட்டியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஒரு போலீஸ் அதிகாரிகாரில் இருந்து ஆணை அழைத்துக் கொண்டு வங்கிக்கு சென்றுள்ளார்.
மற்றொரு அதிகாரி அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இது குறித்து புகார் கிடைத்ததும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.
சம்பந்தப்பட்ட இருவரும் 7 நாள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 11:26 am
தகாத முறையில் பேசியதற்காக வருந்துகிறேன்: பிரதமர் முன்னிலையில் மன்னிப்பு கோரினார் சனுசி
May 5, 2024, 10:47 am
கெடாவில் கடும் ஏழைகளின் எண்ணிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க 2 மாதம் அவகாசம்: பிரதமர்
May 5, 2024, 10:32 am
பெட்ரோல், டீசல் விலை உயரும் எனும் அந்நிய நாட்டு ஊடகத்தின் செய்தி தவறானது: ஃபஹ்மி
May 4, 2024, 6:19 pm