நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஞாயிற்றுக்கிழமை வரை ஜொகூர், பகாங் மாநிலங்களில் கனமழை தொடரும் 

கோலாலம்பூர்: 

இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை ஜொகூர், பகாங் மாநிலங்களிலுள்ள பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

பகாங்கில் உள்ள ரொம்பின்,பெக்கான், ஜொகூரில் உள்ள சிகாமாட், குளுவாங், மெர்சிங், கோத்தா டிங்கி, தங்காக், மூவார், பத்து பாஹாட், கூலாய் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் மெட்மலேசியா ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், சரவாக்கில் இன்றும் தொடர் மழைக்கான எச்சரிக்கை நிலை, கூச்சிங், செரியன், சமரஹான், ஸ்ரீ அமான், பெதோங், சரிகேய் மற்றும் முக்காஹ் போன்ற பல பகுதிகளை உள்ளடக்கியது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset