நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

விமானத்தின் கதவைத் திறந்து குதித்த பயணியால் பரபரப்பு

ஒத்தாவா: 

விமானத்தின் கதவைத் திறந்து திடீரென்று குதித்த பயணியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஏர் கனடா விமானத்தைச் சேர்ந்த பயணி ஒருவர் விமானத்தின் கதவைத் திறந்து சுமார் ஆறு மீட்டர் உயரத்திலிருந்து குதித்துள்ளார். 

இதனால் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதாக க்ளோபல் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 

பியர்சன் தொரொந்தோ விமான நிலையத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சம்பந்தப்பட்ட பயணி சாதரணமாக விமானத்தில் ஏறிய பிறகு இவ்வாறான நடவடிக்கையில் ஈடுப்பட்டார் என்று விமான நிலைய பேச்சாளர் தெரிவித்தார். 

பயணி ஒருவர்  விமானத்திலிருந்து குதித்து காயங்களுக்கு இலக்கானதால் அவசர அழைப்பு மூலம் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். 

இந்த சம்பவம் தொடர்பில் விமான நிலைய அதிகாரிகள் தகுந்த விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இதனால் சம்பந்தப்பட்ட விமானத்தின் பயணம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset