செய்திகள் மலேசியா
மித்ராவை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தாதீர்: டத்தோ ரமணன் எச்சரிக்கை
கோலாலம்பூர்:
மித்ராவை அரசியல் ஆயுதமாக பயன்படுத்த வேண்டாம் என தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவுத் துறை துணையமைச்சர் டத்தோ ரமணன் எச்சரித்துள்ளார்.
கடந்த காலங்களில் மித்ரா பிரதமர் துறையின் கீழ் இருந்தது. அப்போது சிறப்பு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டது. அதற்கு தலைவராகவும் நான் பதவியேற்றேன்.
இந்நிதியை பயன்படுத்துவது முதல் கணக்கு காட்டுவது வரையிலாவரையிலான அடிப்படை வழிமுறைகளை நாங்கள் செய்துள்ளோம்.
தற்போது மித்ரா தேசிய ஒருமைப்பட்டு அமைச்சின் கீழ் மாற்றப்பட்டு உள்ளது. நாங்கள் அமைத்த வழிமுறைகளை பயன்படுத்துதா இல்லையா என்பது அந்த அமைச்சின் முடிவாகும்.
அதே வேளையில் மித்ராவின் நிலைப்பாட்டை அரசு இன்னும் முடிவு செய்யவில்லை என்று அமைச்சர் பாஹ்மி கூறியுள்ளார்.
என்னை பொருத்தவரையில் மித்ரா தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் கீழ் உள்ளது. அமைச்சரவைக் கூட்டத்திற்கு நான் செல்வது இல்லை. அங்கு என்ன பேசப்பட்டது என்றும் எனக்கு தெரியாது.
பிரதமர் தான் அது குறித்து அறிவிப்புகளை செய்ய வேண்டும் என்று டத்தோ ரமணன் கூறினார்.
மித்ரா அமைச்சுக்கு மாற்றப்பட்டது. அதற்கு ஒதுக்கப்படும் நிதி, அடுத்து தலைமையேற்கப்போவது யார் என்ற விவகாரங்கள் தொடர்ந்து சர்ச்சையாக்கப்பட்டு வருகிறது.
என்னை பொருத்த வரையில் மித்ராவை வைத்து யாரும் அரசியல் நடத்த வேண்டாம். அது அரசியல் ஆயுதம் இல்லை.
மித்ரா எங்கிருந்தாலும் பரவாவில்லை. அதற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படுகிறதா, அந்நிதி எப்படி சமுதாயத்தை சென்றடைகிறது என்பதில் தான் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்.
ஆகவே இதுபோன்ற விவகாரங்களை வைத்து அரசியல் நடுத்தாமல் சமுதாயத்திற்கு ஏதாவது உருப்படியான விஷசங்களை செய்யுங்கள் என்று டத்தோ ரமணன் கூறினார்.
-பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 28, 2024, 7:28 pm
பேரா மாநில மஇகா மகளிர், இளைஞர் , புத்ரா, புத்ரி தேர்தல்: மூன்று தொகுதிகளில் போட்டி
April 28, 2024, 3:00 pm
கோல குபு பாருவில் பொய் பிரச்சாரங்களை இந்திய சமூகம் நம்பக் கூடாது: டத்தோ ரமணன்
April 28, 2024, 2:57 pm
டத்தோ ரமணனின் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் 5,000 பேர் கலந்து கொண்டனர்
April 28, 2024, 2:53 pm
இந்திய அரசின் உயர் கல்வி வாய்ப்புகளை இழந்தால் மீண்டும் கிடைக்காது: சுரேந்திரன் கந்தா
April 28, 2024, 1:59 pm
முதியவரைத் தாக்கிய விவகாரம்; சமூக நல இல்லத்தின் நிர்வாகிக்கு 4,500 ரிங்கிட் அபராதம்
April 28, 2024, 12:40 pm
இந்தியாவில் கல்வி பயிலும் மலேசிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்: தூதரக அதிகாரி சுஷ்மா
April 28, 2024, 11:34 am
ஆம்புலன்ஸ் 6 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்தது: இருவர் காயம்
April 28, 2024, 11:23 am
சிலாங்கூர் மாநிலத்தின் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு விதி மீறல் அல்ல: மந்திரி புசார் விளக்கம்
April 28, 2024, 11:08 am
எதிர்க்கட்சி கூட்டணிக்கான வாக்குகள் பெரிய மாற்றத்தைக் கொண்டு வராது: டத்தோ ரமணன்
April 28, 2024, 10:47 am